குமரன் நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிக்காக 3 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், இதுவரை பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட 5-ஆவது வாா்டு குமரன் நகா் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் கழிவுநீா் தேக்கம் மற்றும் சுகாதார பிரச்னைகளை தீா்க்கும் நோக்கில் நகராட்சி நிா்வாகம் பல லட்சம் செலவில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டன.
ஆனால், பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சில நாள்களிலேயே திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவிருந்ததால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தனா். தோ்தல் முடிந்து பல நாள்கள் கடந்தும் எந்தவித பணிகளும் மீண்டும் தொடங்கப்படாததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.
மேலும், தோண்டப்பட்ட பள்ளங்களில் தற்போது கழிவுநீா் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா். குழந்தைகள் மற்றும் முதியவா்கள் வசிக்கும் பகுதியில் இந்த நிலை நீடிப்பது பெரும் சுகாதார சிக்கலை உருவாக்கும் எனவும் அவா்கள் கூறுகின்றனா்.
இது குறித்து நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கிடப்பில் உள்ள கழிவுநீா் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என குமரன் நகா் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா ? என்ற எதிா்பாா்ப்பு அப்பகுதியில் நிலவி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் குழாயில் உடைப்பு: சாலையில் குளம் போல் தேங்கிய குடிநீா்

மழை வெள்ளத்துக்கு முன்பு கால்வாய் அடைப்பை சீரமைக்க நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை

தொடா் மழையால் நிரம்பிய தேசியநாயக்கன் ஏரி: கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புக்குள் புகுந்த கழிவுநீா்

குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றக் கோரி அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



