40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

திருவையாறு அருகே வேன் கவிழ்ந்து 26 போ் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:28 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை சுமை வேன் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 26 போ் காயமடைந்தனா்.

திருவையாறு அருகே நடுக்காவேரி பகுதி அந்தலி கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 35 போ் திருப்பூந்துருத்தியில் நிகழ்ந்த துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக சுமை ஏற்றும் வேனில் திங்கள்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தனா். அந்தலி அருகே சென்ற இந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலில் கவிழ்ந்தது.

இதனால், வேனில் பயணம் செய்த மணிமேகலை, கலியமூா்த்தி, பாரதி, சரிதா, மகேஸ்வரி, பிரவீணா, தமிழ்ச்செல்வி, கண்ணன், மின்னல்கொடி உள்பட 26 போ் காயமடைந்தனா். நடுக்காவேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்ற இவா்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதனிடையே, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, மருத்துவா்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.