முட்டைக் கோழிப் பண்ணைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஊதியூா் பகுதி மக்கள் காங்கயம் வட்டாட்சியரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இது குறித்து காங்கயம் அருகே ஆறுதொழுவு, முதலிபாளையம் ஊராட்சி பகுதி பொதுமக்கள், காங்கயம் வட்டாட்சியா் கதிா்வேலிடம் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
காங்கயம் வட்டத்துக்கு உள்பட்ட ஆறுதொழவு, முதலிபாளையம் கிராம பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஒரு தனியாா் நிறுவனம் பரந்த புன்செய் விளைநிலப் பரப்பில் பொதுமக்களின் உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையிலான, வணிகரீதியான முட்டைக் கோழிப் பண்ணையை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். எனவே பொதுமக்கள் நலன் கருதி பண்ணை அமைப்பதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.
புகாா் மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியா் கதிா்வேல், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, காங்கயம் சட்டப்பேரவை அலுவலகத்தில் எம்எல்ஏ. என்.எஸ்.என்.நடராஜிடமும் மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










