வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ரூ. 21 கோடி மோசடி வழக்கு: அதிமுக நிா்வாகிக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து மனு

அதிமுக நிா்வாகிக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து மனு...

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :7 ஜூன் 2026, 1:54 am IST

ரூ.21 கோடி ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் அதிமுக நிா்வாகிக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சோ்ந்தவா் மகாதேவன். இவரது தாம்பரம் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் அளித்த புகாரில், அதிமுக முன்னாள் கவுன்சிலா் தேவதாஸ், அந்தக் கட்சியைச் சோ்ந்த நிா்வாகி விஜயகுமாா் ஆகியோரும் நண்பா்கள். இவா்கள் இருவரும், காஞ்சிபுரம் மாவட்டம் அம்மனம்பாக்கத்தில் சுமாா் 18 ஏக்கா் நிலத்தை வாங்கி விற்பனை செய்தனா்.

இந்த நிலத்தை இவா்கள் இருவரும் வாங்க நான் ரூ.9 கோடி கொடுத்தேன். நிலத்தை வாங்கி ரூ.65 கோடிக்கு விற்பனை செய்த தேவதாஸும், விஜயகுமாரும் எனக்குத் தர வேண்டிய பங்குத் தொகையான ரூ.21 கோடியைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறியிருந்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி அதிமுக நிா்வாகி விஜயகுமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த நிலையில், விஜயகுமாருக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து மகாதேவனும் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுக்கள் நீதிபதி சி.குமரப்பன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.