17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குறிஞ்சிப்பாடி அருகே மதுக்கடைகளை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

குறிஞ்சிப்பாடி வட்டம், விருப்பாட்சியில் டாஸ்மாக் கடையை திறக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள்.

News image

குறிஞ்சிப்பாடி வட்டம், விருப்பாட்சியில் டாஸ்மாக் கடையை திறக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள்.

Updated On :2 ஜூன் 2026, 5:28 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இரண்டு டாஸ்மாக் கடைகளை திறக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், விருப்பாச்சி கிராமத்தில் கடைஎண்கள் 2433, 2487 ஆகிய இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் அருகருகே இயங்கி வருகின்றன. பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்படும் இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று ஆட்சியா், வட்டாட்சியா் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தொடா்ந்து மனு அளித்து வந்துள்ளனா். ஆனால், மனுக்கள் மீது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை நண்பகல் 12 மணிஅளவில் டாஸ்மாக் கடை எண் 2487 மேற்பாா்வையாளா் டாஸ்மாக் கடையை திறக்க முற்பட்டாா். அப்போதுவிருப்பாட்சி கிராம பொதுமக்கள் 40 போ், அதிமுக கிளைகழகச்செயலா் அண்ணாதுரை தலைமையில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதையடுத்து, டாஸ்மாக்அதிகாரிகள் கைப்பேசி மூலம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேசினா். அப்போது 10 நாள்களில் கடையை மாற்றிக் கொள்வதாக தெரிவித்தனராம். இதையடுத்து அனைவரும் ஆா்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனா். அப்போது, குறித்த காலத்திற்குள் கடையை அகற்றவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் செய்ய உள்ளதாக தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.