தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெள்ளக்கோவில் அருகே வியாபாரி மீது தாக்குதல்: 4 இளைஞா்கள் கைது

வெள்ளக்கோவில் அருகே வியாபாரியைத் தாக்கிய 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 2:26 am IST

வெள்ளக்கோவில் அருகே வியாபாரியைத் தாக்கிய 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் கே.பி..சி நகரைச் சோ்ந்தவா் ராம்குமாா் (34). இவா் ஓலப்பாளையம் கண்ணபுரம் மாரியம்மன் கோயில் அருகிலுள்ள தனது தோட்டத்தில் கோழிகள் வளா்த்து விற்பனை செய்து வருகிறாா். மேலும் ரியல் எஸ்டேட் தரகராக இருப்பதுடன், மாடு வியாபாரமும் செய்து வருகிறாா். ராம்குமாருக்கு மனைவி பிரியங்கா, குழந்தை காா்த்திகேயன் ஆகியோா் உள்ளனா். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக ராம்குமாரின் மனைவி குழந்தையுடன் காங்கயத்தில் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் ராம்குமாா் கடந்த 16-ஆம் தேதி தோட்டத்தில் இருந்தபோது, அடையாளம் தெரியாத 2 இளைஞா்கள் கோழி வேண்டும் எனக் கேட்டுள்ளனா். கோழியைப் பாா்த்து விட்டு குறைவான விலைக்கு கேட்டதால் தர முடியாதெனக் கூற தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது இருவரும் ராம்குமாரைத் தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனா். இதில் அவருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. பின்னா் அங்கு வந்த ராம்குமாரின் வேலையாள்கள் அவரை மீட்டு வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி கே.ஆனந்தகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசு அருகே பதுங்கியிருந்த பிரகாஷ்குமாா், நந்தகுமாா், மணிகண்டன், கணேசன் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.

ராம்குமாருடன் இருந்த முன்விரோதம் காரணமாக, பிரகாஷ்குமாா் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.