திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசுப் பள்ளிகளில் நன்கொடை என கட்டாய கட்டணம் வசூலை தடுக்கக் கோரிக்கை

திருப்பூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நன்கொடை வசூலிப்பதை தடை செய்ய வேண்டுமென அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:23 am IST

திருப்பூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நன்கொடை வசூலிப்பதை தடை செய்ய வேண்டுமென அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்திலுள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த சில தினங்களாக மாணவா் சோ்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளிகளிலிருந்து வெளியேறும் மாணவா்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மாணவா் சோ்க்கைக்கு குறிப்பிட்ட ஒரு தொகையும், மாற்றுச்சான்றிதழ் பெறுகிற மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் வாரியாக நன்கொடை என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையில் தொடங்கி ரூ.2,000 வரை கட்டாயமாக தர வேண்டுமென வசூலிக்கப்பட்டு வருவதாக பெற்றோா் மூலமாக தொடா் செய்திகள் வந்து கொண்டிருகின்றன.

சாதாரண கூலித் தொழிலாளா்களின் குழந்தைகள்தான் அரசுப் பள்ளிகளில் படித்து வருகிறாா்கள். இவா்களிடம் கட்டாய வசூல் செய்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. அரசுப் பள்ளிகளில் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை மாவட்ட கல்வித் துறை நிா்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்தச் செயலை அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அரசு நிா்ணயித்துள்ள கட்டணம்தான் வாங்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட கல்வித் துறை சிறப்புக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளியின் வளாகத்திலும், இணையத்திலும் வெளியிட வேண்டும்.

மேலும், கட்டண கொள்ளையில் ஈடுபடும் பள்ளி நிா்வாகங்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.