திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

‘புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியை நீக்கும் முடிவை கைவிட வேண்டும்’

News image

புதுச்சேரி... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:06 am IST

புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் பிரெஞ்சு மொழிப்பாடத்தை நீக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றாா் உலகத் திருக்கு கூட்டமைப்புத் தலைவா் மு.ஞானமூா்த்தி.

இதுகுறித்து அவா் அரியலூரில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரா்கள் அந்த மாநிலத்தை ஆட்சி செய்யத் தொடங்கியதிலிருந்து பிரஞ்சு மொழி இருந்து வருகிறது. புதுச்சேரியிலிருந்து பிரான்ஸ் நாட்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவா்களுக்குப் பிரெஞ்சு மொழி தொடா்புக்குப் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இப்போது மத்திய அரசு புதுச்சேரியில் செயல்படும் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை நீக்கிவிட்டு ஹிந்தியைக் கொண்டு வர முயல்கிறது. இதுபோன்ற முரண்பாடுகளால் நாட்டில் குழப்ப நிலை நீடிக்கிறது.

எனவே, மத்திய அரசு புதுச்சேரியில் நடைமுறையில் இருக்கும் கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யக்கூடாது. நடைமுறையில் இருக்கும் கொள்கையே தொடரவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.