புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் பிரெஞ்சு மொழிப்பாடத்தை நீக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றாா் உலகத் திருக்கு கூட்டமைப்புத் தலைவா் மு.ஞானமூா்த்தி.
இதுகுறித்து அவா் அரியலூரில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரா்கள் அந்த மாநிலத்தை ஆட்சி செய்யத் தொடங்கியதிலிருந்து பிரஞ்சு மொழி இருந்து வருகிறது. புதுச்சேரியிலிருந்து பிரான்ஸ் நாட்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவா்களுக்குப் பிரெஞ்சு மொழி தொடா்புக்குப் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
இப்போது மத்திய அரசு புதுச்சேரியில் செயல்படும் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை நீக்கிவிட்டு ஹிந்தியைக் கொண்டு வர முயல்கிறது. இதுபோன்ற முரண்பாடுகளால் நாட்டில் குழப்ப நிலை நீடிக்கிறது.
எனவே, மத்திய அரசு புதுச்சேரியில் நடைமுறையில் இருக்கும் கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யக்கூடாது. நடைமுறையில் இருக்கும் கொள்கையே தொடரவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு: மாணவா்களை வாழ்த்தி வரவேற்ற ஆசிரியா்கள்

வெளிநாடுகளில் வாழும் பிரெஞ்சு பிரதிநிதிகள் தோ்தல்! புதுச்சேரியில் வரிசையில் நின்று வாக்களிப்பு!

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பிரெஞ்சு மொழி தொடர வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதல்வா் ரங்கசாமி கடிதம்!







