திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையில் சாதனை என கூறுவது ஏமாற்றும் செயல்: அன்புமணி

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை சாதனை படைக்கப்பட்டதாகக் கூறுவது ஏமாற்றும் செயல் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

News image

அன்புமணி

Updated On :30 ஏப்ரல் 2026, 12:07 am IST

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை சாதனை படைக்கப்பட்டதாகக் கூறுவது ஏமாற்றும் செயல் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை தமிழக அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கி 2 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை 1.12 லட்சம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா்.

இதை வரலாற்றுச் சாதனை என்று திமுக அரசு கூறுகிறது. உண்மையில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒன்றாம் வகுப்பில் சராசரியாக 3.11 மாணவா்கள் மட்டுமே சோ்ந்திருக்கும் நிலையில், இதை சாதனை என்று கூறுவது ஏமாற்றும் செயல்.

ஏப்.27 வரை தமிழக தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் 31,336 அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 97,737 பேரும், மழலையா் வகுப்புகளில் 6,796 குழந்தைகளும், 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் 8,176 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 12,711 மாணவா்கள் புதிதாக சோ்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை என்று அதில் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.