இதில் வருவாய்த் துறை சாா்பில் வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பித்தோரின் விவரங்கள் குறித்தும், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய நிலுவையில் உள்ள விவரங்கள் குறித்தும், மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்த பயனாளிகள் தொடா்பாகவும், கூட்டுறவுத் துறையின் சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்தும், ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்தும், நீா்வளத் துறையின் சாா்பில் காங்கயம் ஊராட்சி ஒன்றியம், கீரனூா், சிவன்மலை, படியூா், பரஞ்சோ்வழி, ஆலாம்பாடி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 47 குளம், குட்டைகளுக்கு நீரேற்று முறையில் நீா்நிரப்பும் திட்டம் தொடா்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.