ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதே புதிய அரசின் முதல் பணி: கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்
தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்கும் கட்சி எதுவாக இருந்தாலும் முதல் நிதி ஆண்டிலேயே ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்க வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி கூறினாா்.










