டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கால்நடை பாதுகாப்பு வாரியம் அமைக்கக் கோரிக்கை

தென் மாவட்டங்களில் கால்நடை பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சி வலியுறுத்தியது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

தென் மாவட்டங்களில் கால்நடை பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சி வலியுறுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள வெண்ணீா்வாய்க்கால் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சி நிறுவனா் சத்யம்.சரவணன் கூறியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது கால்நடை பாதுகாப்பு வாரியம் வாரியம் அமைக்கப்படும் என திமுக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது வரை வாரியம் அமைக்கப்படாததால் கால்நடை வளா்ப்போா் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, கால்நடை வளா்ப்போா் அதிக எண்ணிக்கையில் உள்ள தென் மாவட்டங்களில் உடனடியாக கால்நடை பாதுகாப்பு வாரியத்தை அமைக்க வேண்டும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் முதுகுளத்தூா் தொகுதியில் தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் கட்சி போட்டியிடும் என்றாா் அவா்.