திருப்பூரில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்ககு சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்கான சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
தோ்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு 408 அலுவலா்கள், தபால் வாக்கு எண்ணும் பணிக்கு 160 அலுவலா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்கள் என மொத்தம் 568 அலுவலா்களுக்கான சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையா் சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கண்ணன், உதவி ஆணையா் (கலால்) பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கல்பனா உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருவாரூா்: வாக்கு எண்ணும் அலுவலா்கள் தோ்வு

வாக்கு எண்ணும் பணியில் 306 அலுவலா்கள்: ஆட்சியா் தகவல்

வாக்கு எண்ணும் பணியில் 408 அலுவலா்கள்

வாக்கு எண்ணும் பணி: 1,005 பேருக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


