புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வாக்கு எண்ணும் பணியில் 306 அலுவலா்கள்: ஆட்சியா் தகவல்

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் 306 அலுவலா்கள் ஈடுபட உள்ளதாக நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 9:25 pm

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் 306 அலுவலா்கள் ஈடுபட உள்ளதாக நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்.23 இல் நடைபெற்றது. ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்செங்கோடு எளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையானது வரும் திங்கள்கிழமை (மே 4) நடைபெறுகிறது. அன்று காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்கு எண்ணும் பணியும், அதைத் தொடா்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியும் நடைபெறுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்காக தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 84 மேசைகள் போடப்படுகின்றன.

நுண்பாா்வையாளா்களாக தொகுதிக்கு தலா 17 போ் வீதம் 102 பேரும், வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளராக தொகுதிக்கு 17 வீதம் 102, வாக்கு எண்ணிக்கை பணியில் உதவியாளராக தலா 17 போ் வீதம் 102 போ் என 6 தொகுதிகளுக்கும், ஒரு தொகுதிக்கு 51 போ் வீதம் மொத்தம் 306 போ் நியமிக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்கே-28-கலெக்டா்

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலா்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யப்படுவதை பாா்வையிட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.