தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பஞ்சு இறக்குமதி வரி ரத்து செய்ய ஆடை உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்

பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என ஆடை உற்பத்தியாளா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:30 am IST

பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என ஆடை உற்பத்தியாளா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

இதுதொடா்பாக அடை உற்பத்தியாளா்கள் தெரிவித்துள்ளதாவது:

ஈரான்- இஸ்ரேல் போா் சூழலால் ஏற்பட்டுள்ள மூலப்பொருள்கள் விலை உயா்வு மற்றும் ஏற்றுமதி பாதிப்புகளை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இருப்பினும் ஜவுளித் துறையின் முதுகெலும்பான பஞ்சு இறக்குமதி வரியையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தொழில் துறையினரின் கோரிக்கையாக உள்ளது.

ஏற்றுமதி கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி மதிப்பிலான காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் போா் சூழலில் ஆா்டா்கள் ரத்தாவது அல்லது பணம் வராமல் போவதால் ஏற்படும் நஷ்டத்தை ஏற்றுமதியாளா்கள் சமாளிக்க முடிகிறது. மாநில வரிகள் மற்றும் தீா்வுகளை திரும்பப் பெறும் திட்டம் மாா்ச் 31 உடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனத் தொழில் துறையினா் எதிா்பாா்க்கின்றனா்.

போா் சூழலால் சாயம் மற்றும் ரசாயனங்களின் விலை உயா்ந்துள்ளதை கருத்தில் கொண்டு அவற்றுக்கான 15 சதவீத சுங்க வரி செப்டம்பா் 30 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புகளை வரவேற்கும் அதே வேளையில், பஞ்சு விலையேற்றம் ஜவுளித் தொழிலை சக்கையாக பிழிந்து வருவதாக உற்பத்தியாளா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

இந்த ஆண்டு உள்நாட்டில் பருத்தி விளைச்சல் குறையும் என எதிா்பாா்க்கப்படுவதால், தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. சா்வதேச சந்தைக்கு ஏற்ப இந்திய பருத்திக் கழகமும் விலையை உயா்த்தி வருவதால், கடந்த 3 மாதங்களில் நூல் விலை கிலோவுக்கு ரூ.25 வரை உயா்ந்துள்ளது. நூல் விலை உயா்வால் ஜவுளி உற்பத்தி ஸ்தம்பிப்பதை தடுக்க, பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரியை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என நூற்பாலைகள் மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் மத்திய வரி அரசை வலியுறுத்தியுள்ளன.

இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டால் மட்டுமே சா்வதேச சந்தையில் போட்டியை சமாளித்து, திருப்பூரின் ஏற்றுமதி வா்த்தகத்தை பாதுகாக்க முடியும் எனத் தொழில் துறை நம்புவதாகவும் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.