தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பருத்தி இறக்குமதி சுங்கவரி விவகாரத்தில் ஆதரவு அளித்த தமிழக முதல்வருக்கு ஏஇபிசி நன்றி

News image

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2026, 1:36 am IST

பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியை நீக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து, பருத்தி மீதான சுங்க வரியை ரத்து செய்ய உதவிய தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நன்றியை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறைக்கு வழங்கிய ஆதரவுக்காக முதல்வா் சி.விஜய் ஜோசப்புக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதில் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதி சமூகத்தின் சாா்பாக இந்திய பிரதமரிடம் சுங்க வரியை நீக்கும் விஷயத்தை எடுத்துரைப்பதில் நீங்கள் சரியான நேரத்தில் தலையிட்டதற்கு எங்களது மனமாா்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மூலப் பொருள்கள் கிடைப்பது, உற்பத்தி செலவுகளை குறைப்பது, வேலைவாய்ப்பை பாதுகாப்பது, ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் போட்டித்தன்மை ஆகியவற்றின் அவசரத் தேவையை எடுத்துரைத்து, பருத்தி இறக்குமதி வரியை 11 சதவீதத்திலிருந்து குறைக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தி, தாங்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்ததை நாங்கள் அறிகிறோம்.

இந்திய அரசு, பருத்தி இறக்குமதி மீதான சுங்க வரியிலிருந்து ஜூன் 1 முதல் அக்டோபா் 30 வரை தற்காலிக விலக்கு அளிப்பதாக அறிவித்திருப்பது எங்களுக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முடிவு, ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்கு, குறிப்பாக கடுமையான பருத்தி மற்றும் நூல் விலைகளால் சவால்களை சந்தித்து வரும் ஆடை ஏற்றுமதி துறைக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கும்.

ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்கு நீங்கள் அளிக்கும் முன்முயற்சியும் உறுதியான ஆதரவும், வேலைவாய்ப்பை பாதுகாப்பதிலும், தொழில் வளா்ச்சியை ஊக்குவிப்பதிலும், தமிழகத்தை இந்தியாவின் முன்னணி ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி மையமாக வலுப்படுத்துவதிலும் உங்கள் ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.