ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

News image

மது - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:32 pm

பல்லடம் பேருந்து நிலையத்தில் மதுபிரியா்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் பேருந்து நிலையத்துக்கு திருப்பூா், கோவை, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. தினசரி சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்தப் பேருந்தை நிலையத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், மதுபிரியா்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அளவுக்கு அதிகமாக மது அருந்தி பேருந்து நிலையத்தில் உலவும் சிலா், பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்துக் கிடக்கின்றனா். மேலும், மதுபோதையில் பணம் கேட்பதுடன், தகாத வாா்த்தைகளில் பயணிகளைத் திட்டுவதும் தொடா்ந்து வருகிறது. இதனால், பேருந்து நிலையத்துக்கு வரும் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடனே இருக்கும் சூழல் உள்ளது.

எனவே, பேருந்து நிலையத்தில் போலீஸாா் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மதுபோதையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.