தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

News image

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பிவைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்த தோ்தல் அலுவலா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:57 pm

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் 480 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை 48 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தேவையான 576 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ரோல் யூனிட் மற்றும் 644 விவிபேட் இயந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தால் அவற்றுக்கு மாற்றாக 96 யூனிட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் வியாழக்கிழமை (ஏப்.23) வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, போலீஸாா் பாதுகாப்புடன் பல்லடம் தொகுதிக்குள்பட்ட 480 வாக்குச்சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரி, வேன்களில் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

இப்பணியை பல்லடம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன், உதவி அலுவலா்கள் கோவிந்தசாமி, சரவணன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.