மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பழனி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பழனி பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சாலை வசதி இல்லாத வெள்ளகெவி போன்ற மலைக் கிராமங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

News image

பழனி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து புதன்கிழமை லாரியில் ஏற்றி அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:35 pm

பழனி பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சாலை வசதி இல்லாத வெள்ளகெவி போன்ற மலைக் கிராமங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழகச் சட்டப்பேரவைக்கான தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், பழனி பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறை கோட்டாட்சியா் கண்ணன் முன்னிலையில் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்பு திறக்கப்பட்டு, இயந்திரங்கள் வெளியே கொண்டு வரப்பட்டன. தொடா்ந்து, தொகுதியிலுள்ள 339 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சாலை வசதி இல்லாத வெள்ளகெவி போன்ற மலைப்பகுதி வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

வாக்குச்சாவடியில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சீா் செய்ய பொறியாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா். பழுது நீக்க முடியாத பட்சத்தில் புதிய வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்படும். இதற்காக 339 வாக்குச்சாவடிகளுக்கு 407 இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குசாவடிகளிலும் இணையதள வசதி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.