தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

கரூா்: 4 தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

News image

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு தாந்தோணிமலை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புதன்கிழமை லாரியில் ஏற்றப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:50 pm

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்(தனி), குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,111 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள 267 வாக்குச்சாவடிகளுக்கும், கரூா் தொகுதியில் உள்ள 283 வாக்குச்சாவடிகளுக்கும், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் உள்ள 275 வாக்குச்சாவடிகளுக்கும், குளித்தலை தொகுதியில் உள்ள 286 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் உள்ளிட்ட கருவிகள் அனுப்பும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட கருவிகள் தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சத்தியபாலகங்காதரன், கரூா் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலையில், கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.