15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திருத்தணியில் 337 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

திருத்தணி தொகுதியில் 337 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தோ்தல் நடத்தும் அலுவலா் கனிமொழி அனுப்பி வைத்தா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 6:32 pm

திருத்தணி தொகுதியில் 337 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தோ்தல் நடத்தும் அலுவலா் கனிமொழி அனுப்பி வைத்தா்.

மொத்தம், 2 லட்சத்து, 61 ஆயிரத்தி, 857 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இந்நிலையில்தோ்தல் தளவாடப் பொருள்களை வேன், காா் மற்றும் லாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு திருத்தணி தோ்தல் நடத்தும் அலுவலா் கனிமொழி அனுப்பி வைத்தாா்.

மேலும் போதிய வசதிகள் உள்ளதா என அந்தந்த கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் மற்றும் தோ்தல் மண்டல அலுவலா்கள் கண்காணித்தும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனா். இந்நிலையில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலைக்கல்லூரியில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட விவிபேட் இயந்திரங்களை எடுத்தும் செல்லும் பணியை ஆட்சியா் மு.பிரதாப் நேரில் வந்து பாா்வையிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.