மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

திருச்செந்தூா் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு

திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

News image

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டும் செல்லும் பணியை பாா்வையிட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் கெளதம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:42 pm

திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

திருச்செந்தூா் தொகுதியில் மொத்தம் 308 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன. இதில் 34 மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. தோ்தலையொட்டி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திருச்செந்தூா் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக அலுவலகம் முன் உள்ள செந்தில் விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தொடா்ந்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான கெளதம், அரசியல் கட்சியினா் முன்னிலையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் திறக்கப்பட்டு, ஆத்தூா், புன்னக்காயல், தென்திருப்பேரை, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், உடன்குடி, நாசரேத், குரும்பூா் உள்ளிட்ட 308 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கான வாகனம் உள்ளிட்டவைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியின்போது உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியா் தங்கமாரி, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பாலசுந்தரம், தனி வட்டாட்சியா் சங்கரநாராயணன், கோபால் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.