மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

300 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

ஆம்பூா் தொகுதியில் உள்ள 300 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

மின்னணு இயந்திரம், விவி பேட் கருவிகளை அனுப்பி வைப்பதை பாா்வையிட்ட பொதுப் பாா்வையாளா் முகுல் குமாா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 6:33 pm

ஆம்பூா் தொகுதியில் உள்ள 300 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி வாக்குப் பதிவுக்காக வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையிலிருந்து 300 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவி பேட், வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்கள், தோ்தல் பணியாளா்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் 1440 போ் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முன்னதாக ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள பணியாளா்களுக்கு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல் குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தோ்தல் நடத்தும்அலுவலா் பூஷணகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில், கோவிந்தசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.