திருப்பூா் மாவட்டத்தில் வேட்பாளா்களின் இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
திருப்பூா் வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பிரமாண்ட இருசக்கர வாகன பேரணியுடன் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டாா். எம்.எஸ். நகரில் இருந்து இருசக்கர வாகனங்களுடன் பேரணியாக வந்து பாண்டியன் நகரில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
இதில் அவா் பேசியதாவது:
திமுகவின் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட்கள் துணைபோகின்றனா். கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் திருப்பூா் மக்களின் பிரச்னைகளுக்காக போராடி அவற்றை தீா்த்து வைத்தது அதிமுக. பஞ்சபடி பிரச்னை முதல் சாய தொழில் பிரச்னை வரை தீா்த்து வைத்தது அதிமுக. 4 குடிநீா் திட்டங்களை அளித்ததும் அதிமுகதான் என்றாா்.
திருப்பூா் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.என். விஜயகுமாா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.
இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ரவி பாண்டியன் நகரில் தொடங்கி எம்.எஸ்.நகரில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் திருப்பூா் தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக தங்கராஜ் போட்டியிடுகிறாா். அவரை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக திரௌபதி திரைப்பட இயக்குமா் மோகன் ஜி மற்றும் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் ஆகியோா் பங்கேற்று, கரட்டாங்காடு பகுதியில் நடைபெற்ற வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் செல்வம், திரைப்பட நடிகா் ரஞ்சித், பாஜக தேசிய மகளிா் அணி செயலாளா் மலா்கொடி, அதிமுக மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் அன்பகம் திருப்பதி உள்பட பலா் பங்கேற்றனா்.
இதைத்தொடா்ந்து பாஜக, அதிமுக, தமாகா, பாமக , மஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் 1000-க்கும் மேற்பட்டோா் பெரிச்சிபாளையம், வெள்ளியங்காடு, ஏபிடி சாலை, தென்னம்பாளையம் வழியாக ராயபுரம் ரவுண்டானாவில் வாகனப் பேரணியை நிறைவு செய்தனா்.
இதேபோல, திருப்பூா் தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ந.தினேஷ்குமாா் தனது இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரத்தை கொங்கணகிரியில் தொடங்கி சிடிசி காா்னா் பகுதியில் நிறைவு செய்தாா்.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

கூடலூரில் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவு

பவானி நகரில் திமுக, அதிமுக இறுதிக்கட்ட பிரசாரம்

ராமநாதபுரம், கமுதி தொகுதிகளில் கே.அண்ணாமலை வாக்கு சேகரிப்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


