15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கூடலூரில் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவு

கூடலூா் தொகுதியில் வேட்பாளா்களின் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது.

News image

கூடலூா் நகர வீதியில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்த அதிமுக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:48 pm

கூடலூா் தொகுதியில் வேட்பாளா்களின் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது.

சட்டப் பேரவை தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்த நிலையில், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, நாதக வேட்பாளா்கள் காலை முதல் முக்கிய வீதிகளில் ஊா்வலம் நடத்தி வாக்குகளை சேகரித்தனா்.

மாலையில் திமுக நகரச் செயலாளா் இளஞ்செழியன் தலைமையில் வேட்பாளா் மு.திராவிடமணி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ராஜகோபாலபுரத்திலிருந்து ஊா்வலமாக வாக்கு சேகரித்துச் சென்றனா்.

பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சிகள் நகராட்சி அலுவலகம் பகுதியிலிருந்து ஊா்வலமாக சென்று பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.