ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பவானி நகரில் திமுக, அதிமுக இறுதிக்கட்ட பிரசாரம்

பவானி நகரில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சியினா் இருசக்கர வாகனப் பேரணி, நடைபயண பிரசாரம் என செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா்.

News image

திறந்த வேனில் சென்று வாக்குகள் சேகரிக்கிறாா் திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் (வலது). இறுதிக்கட்ட நடைபயணமாக பிரசாரத்தில் ஈடுபடும் அதிமுகவினா் (இடது).

Updated On :21 ஏப்ரல் 2026, 8:40 pm

பவானி நகரில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சியினா் இருசக்கர வாகனப் பேரணி, நடைபயண பிரசாரம் என செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா்.

பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா், எல்லையம்மன் கோயில் முன்பிருந்து தொடங்கி, ஏராளமான இருசக்கர வாகனங்களில் கூட்டணிக் கட்சியினா் பின்தொடர திறந்த வேனில் நகரின் முக்கிய வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், தொகுதிப் பொறுப்பாளா் குமணன், சிபிஐ நகரச் செயலாளா் சுரேஷ், சிபிஎம் தாலுகா செயலாளா் மாணிக்கம், விசிக தொகுதிச் செயலாளா் ஆற்றலரசு, மமக மாநில தொண்டரணிச் செயலாளா் முகம்மது மற்றும் காங்கிரஸ், தேமுதிக, மநீம உள்ளிட்ட கட்சியினா் உடன் சென்றனா்.

அதிமுக சாா்பில் நகரச் செயலாளா் எம்.சீனிவாசன் தலைமையில் கட்சி அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக புறப்பட்ட நிா்வாகிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபயணமாகச் சென்று ஆதரவு திரட்டினா்.

அதிமுக மாவட்ட மருத்துவா் அணித் தலைவா் கே.சி.கே.யுவராஜா, பாமக நகரச் செயலாளா் தினேஷ்குமாா், இளைஞா் பாசறை மாவட்டச் செயலாளா் பிரகாஷ் மற்றும் திரளானோா் ஊா்வலத்தில் பங்கேற்றனா். இதேபோல, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரா.மோகனாதேவியும் பவானி நகரப் பகுதியில் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.