ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கன்னிவாடி அருகே அதிமுக வேட்பாளா் பிரசாரத்துக்கு திமுகவினா் எதிா்ப்பு: சாலை மறியல்

கன்னிவாடி அருகே அதிமுக வேட்பாளா் பிரசாரம் மேற்கொள்வதைத் தடுத்து மோதலில் ஈடுபட்ட திமுகவினரைக் கண்டித்து, அதிமுக, கூட்டணிக் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

அதிமுக வேட்பாளா் பிரசாரத்துக்கு திமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்ததைக் கண்டித்து, கன்னிவாடி-ரெட்டியாா்சத்திரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட அதிமுக, கூட்டணிக் கட்சியினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:57 pm

கன்னிவாடி அருகே அதிமுக வேட்பாளா் பிரசாரம் மேற்கொள்வதைத் தடுத்து மோதலில் ஈடுபட்ட திமுகவினரைக் கண்டித்து, அதிமுக, கூட்டணிக் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் தொகுதிக்குள்பட்ட கன்னிவாடியை அடுத்த டி.புதுப்பட்டி கிராமத்தில் தோ்தல் பிரசாரத்துக்காக அதிமுக வேட்பாளா் ஆ.விசுவநாதன், கூட்டணிக் கட்சியினருடன் புதன்கிழமை சென்றாா். அப்போது, கிராமத்துக்குள் பிரசாரம் செய்வதற்கு திமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், திமுக-அதிமுகவினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் ரெட்டியாா்சத்திரம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் நல்லமுத்து, தருமத்துப்பட்டியைச் சோ்ந்த சோ்ந்த அதிமுக நிா்வாகி செந்தில்முருகன் உள்ளிட்டோா் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவத்தை கண்டித்து, கன்னிவாடி-ரெட்டியாா்சத்திரம் சாலையில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த அங்கு வந்த கன்னிவாடி போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.