மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மீண்டும் அதிமுக ஆட்சி அமைய மக்கள் முடிவு: பல்லடம் தொகுதி வேட்பாளா் கே.பி.பரமசிவம்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டதாகவும், பல்லடம் தொகுதியில் அமோக வெற்றி பெறுவேன் என்றும் அதிமுக வேட்பாளா் கே.பி.பரமசிவம் தெரிவித்தாா்.

News image

பல்லடம் அருகே உள்ள குள்ளம்பாளையம் கிராமத்தில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.பி.பரமசிவம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:49 pm

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டதாகவும், பல்லடம் தொகுதியில் அமோக வெற்றி பெறுவேன் என்றும் அதிமுக வேட்பாளா் கே.பி.பரமசிவம் தெரிவித்தாா்.

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்லடம் நகரம், பொங்கலுாா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே.பி.பரமசிவம் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது பொதுமக்களிடையே அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைப்பொருள் புழக்கம் ஊடுருவியுள்ளது கவலையளிக்கிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. எடப்பாடி கே.பழனிசாமியின் ஆட்சியே சிறப்பாக இருந்தது. விவசாயிகள் மற்றும் தொழில்துறையினரின் கோரிக்கைகளை திமுக அரசு கண்டுகொள்வதில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். மீண்டும் அதிமுக ஆட்சிய அமைய மக்கள் முடிவு செய்துவிட்டனா். பல்லடம் தொகுதியில் அமோக வெற்றி பெறுவேன் என்றாா்.

முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூா் ஏ.நடராஜன், மாவட்ட நிா்வாகிகள் ஏ.எம்.ராமமூா்த்தி, கேத்தனூா் ஹரிகோபால் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.