மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக ஆட்சி அமைந்ததும் வீடுகள் இல்லாதோருக்கு வீடுகள் கட்டித் தரப்படும்

திருத்தணி ஒன்றியம் எல்.என்.கண்டிகையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கோ.அரி.

News image

திருத்தணி ஒன்றியம் எல்.என்.கண்டிகையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கோ.அரி.

Updated On :17 ஏப்ரல் 2026, 11:30 pm

வீரகநல்லூரில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் கோ.அரி அதிமுக ஆட்சி அமைந்ததும் வீடுகள் இல்லாதோருக்கு வீடுகள் கட்டித்தரப்படும் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.

திருத்தணி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி திருத்தணி மேற்கு ஒன்றியத்தில், வீரகநல்லுாா், தாடூா், கே.ஜி.கண்டிகை, பீரகுப்பம், எஸ்.அக்ரஹாரம், சிறுகுமி, வி.கே.என்.கண்டிகை, செருக்கனுாா் உள்பட மொத்தம் 14 ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளா் இ.என்.கண்டிகை ரவி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திறந்த வேனில் சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனா்.

அப்போது, வேட்பாளா் கோ. அரி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். சிறுபான்மை துறையினா் நலன் காக்கும் அரசாக அதிமுக உள்ளது. திருத்தணி தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை வீடுகள் இல்லாதவா்களுக்கு நாங்களே வீட்டுமனை வாங்கி, வீடுகள் கட்டித்தருகிறோம். தோ்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்றா்.