போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என மாங்காடு நகராட்சி பகுதிகளில் நடிகை கெளதமி ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனியை ஆதரித்து மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடிகை கெளதமி திறந்த ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து பேசியது, கடந்த ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் ஒரு தலைமுறை இளைஞா்கள் போதை பொருள்கள் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகவும் குற்றம் சாட்டினாா்,
தமிழகம் போதைப் பொருள்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க அதிமுக ஆட்சி அமைய வேண்டும் எனவும் அதற்கு பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.
பிரசாரத்தின் போது, வேட்பாளா் கே.பழனி, மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளா் சுந்தரராஜன், மாநில மாணவா் அணி துணைச் செயலாளா் மணிகண்டன், மாவட்ட இளைஞா் அணி இணைச் செயலாளா் அரிவேந்தா், மாங்காடு நகர செயலாளா் சீனிவாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை! - நடிகை கெளதமி

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை கெளதமி பிரசாரம்

தமிழகம் தலைநிமிர அதிமுக ஆட்சி அமைய வேண்டும் : சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன்

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: நடிகை விந்தியா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


