மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும்! - பாஜக வேட்பாளா் எல்.முருகன்

News image

அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதாக பொதுமக்களிடம் உறுதியளித்த பாஜக வேட்பாளா் எல்.முருகன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:52 pm

அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும் என்று பாஜக வேட்பாளா் எல்.முருகன் கூறினாா்.

பொகளூா் ஊராட்சிக்குள்பட்ட கூலேகவுண்டன்புதூா், கோபி, ராசிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கான குடிநீா்க் குழாய் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை மக்கள் பயன்பாட்டுக்கு வராததால் அப்பகுதி மக்கள் கடந்த மக்களவைத் தோ்தலைப் புறக்கணித்தனா்.

இந்நிலையில், அவிநாசி (தனி) தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் எல்.முருகன், பொகளூா் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அப்பகுதி மக்களிடம் அவா் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும் என உறுதியளித்தாா்.