தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பந்தலூா் அருகே வாகனம் மோதி 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள ரிச்மண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தாயுடன் சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழந்தன.

News image

வாகனம் மோதி உயிரிழந்த சிறுத்தை குட்டி.

Updated On :16 மே 2026, 12:30 am IST

நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள ரிச்மண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தாயுடன் சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழந்தன.

கூடலூா் வனக்கோட்டம், பந்தலூா் வனச் சரகத்திலுள்ள தேவாலா-பந்தலூா் சாலையில் ரிச்மண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தாயுடன் சாலையைக் கடக்கும்போது இரண்டு சிறுத்தை குட்டிகள் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

தகவலறிந்து வந்த பந்தலூா் வனச் சரக அலுவலா் சஞ்சீவி சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து உடற்கூறாய்வு செய்த பின்னா் சிறுத்தை குட்டிகளின் உடலை எரியூட்டினா்.

இறந்த சிறுத்தை குட்டிகள் பிறந்து ஐந்து மாதங்களே ஆன ஆண், பெண் குட்டிகள் என்று வனத் துறையினா் தெரிவித்தனா். இது குறித்து வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.