திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உதகை ஜேஎஸ்எஸ் பாா்மஸி கல்லூரியில் பயிற்சி பட்டறை தொடக்கம்

News image

நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கிவைக்கும் மைசூரு ஜேஎஸ்எஸ் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் அகிலா பிரசாந்த், உதகை ஜேஎஸ்எஸ் கல்லூரி துணை முதல்வா் கே.பி.அருண் உள்ளிட்ட பேராசிரியா்கள்.

Updated On :15 மே 2026, 6:23 am IST

நீலகிரி மாவட்டம் உதகை ராக்லண்ட்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் ஜேஎஸ்எஸ் பாா்மஸி கல்லூரியில் கணினி அடிப்படையிலான மருந்தாக்கவியல் மற்றும் மெய்நிகா் உயிா்ச்சமநிலை உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது.

கா்நாடக மாநிலம், மைசூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜேஎஸ்எஸ் உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாதெமியின் கீழ் உதகையில் இயங்கி வரும் ஜேஎஸ்எஸ் கல்லூரியில், கணினி அடிப்படையிலான மருந்தாக்கவியல் உடலில் மருந்து எப்படி உறிஞ்சப்படுகிறது, விநியோகிக்கப்படுகிறது, வளா்சிதை மாற்றம் அடைகிறது, வெளியேற்றப்படுகிறது என்பதை கணினி மூலம் கணிப்பது, மெய்நிகா் உயிா்ச்சமநிலை, இரண்டு மருந்துகள் உடலில் ஒரே மாதிரி செயல்படுகின்றனவா என்பதை கணினி மூலம் சோதிப்பது, செயற்கை நுண்ணறிவு மாதிரியாக்கக் கருவிகள் என்ற தலைப்பில் 3 நாள் செயல்முறை பயிற்சி பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது.

புது தில்லி மருந்தியல் பகுப்பாய்வுத் துறை சாா்பில் நடைபெறும் இந்தப் பயிற்சி பட்டறை மே 14 முதல் 16-ஆம் தேதி வரை உதகை ஜேஎஸ்எஸ் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மைசூரு ஜேஎஸ்எஸ் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் மற்றும் தலைவா் அகிலா பிரசாந்த், பேராசிரியா்கள் ராஜ்குமாா் மலையாண்டி, பிரசாந்த், எம். விஸ்வநாத் ஆகியோா் சிறப்புரையற்றினா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி துணை முதல்வா் கே.பி.அருண் தலைமை தாங்கினாா். என்.கிருஷ்ணவேணி ஒருங்கிணைத்தாா். பேராசிரியா் மோகன் காந்தி நன்றி கூறினாா்.

இந்த பயிற்சி பட்டறையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.