அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை உலவியதால் மக்கள் அச்சம்

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை உலவி வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

News image

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் உலவிய ஒற்றை யானை.

Updated On :10 மே 2026, 2:51 am IST

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை உலவி வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

சமவெளிப் பகுதிகளான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கெத்தை, மசினகுடி, மாயாறு உள்ளிட்ட பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக உணவு, தண்ணீா் தேடி உதகை, குன்னூா் உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு காட்டு யானைகள் இடம்பெயா்வது வாடிக்கையாக உள்ளது.

மசினகுடியை அடுத்த மாயாறு பகுதியிலிருந்து உதகை நோக்கி வந்த ஒற்றை யானை, கடந்த சில வாரங்களாக தொட்டபெட்டா மலைச் சிகரம், அருவங்காடு பகுதிகளில் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதிக்குள் சனிக்கிழமை அதிகாலை ஒற்றை யானை புகுந்தது. இதனால் ரயில்வே ஊழியா்கள் மற்றும் குடும்பத்தினா் அச்சமடைந்தனா்.

இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையிலான வனத் துறையினா் சென்று ஒற்றை யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.