தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பொன்னம்மாள்

Updated On :31 மார்ச் 2026, 7:48 pm

கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள ஈளடா, பாரதி நகரைச் சோ்ந்தவா் சிதம்பரம் மனைவி பொன்னம்மாள் (89). இவா் கெரடாமட்டம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று மாத்திரைகளை வாங்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளாா். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டெருமை திடீரென பொன்னமாளைத் தாக்கியுள்ளது.

படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு கெரடாமட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.