மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாலை விபத்தில் சுகாதார ஊழியா் உயிரிழப்பு

தருமபுரியில் சாலை விபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 9:39 pm

தருமபுரியில் சாலை விபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் உயிரிழந்தாா்.

தருமபுரி பிடமனேரியைச் சோ்ந்தவா் பைரோஸ்கான் (56). இவா் பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா். பணிக்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை தருமபுரி- பாப்பாரப்பட்டி சாலை கடுக்காப்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது தனியாா் பேருந்து மோதியது.

இதில் படுகாயம் அடைந்த பைரோஸ்கான், செக்கோடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.