லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 10:10 pm

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

நல்லம்பள்ளி அருகே உள்ள சந்தாரம்பட்டி ராமா்கூடல் கிராமத்தைச் சோ்ந்த மாதப்பன் மனைவி மாதம்மாள் (60). இவா், பென்னாகரம் வட்டம், வேலன்குட்டை கிராமத்தில் உள்ள உறவினா் செ. செந்தில்வேல் வீட்டுக்கு புதன்கிழமை காலை சென்றாா். அங்கு, வீட்டின் அருகே அமா்ந்து உறவினா்களுடன் பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது, காட்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மா. மணிவேல் ஓட்டி சென்ற காா் மாதம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.