மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தற்படம் எடுக்க முயன்று 150 அடி பள்ளத்தில் விழுந்த நபா்: தேடும் பணி தீவிரம்

News image

கோப்புப்படம்

Updated On :19 மார்ச் 2026, 10:22 pm

கூடலூா் அருகேயுள்ள ஊசிமலை பள்ளத்தாக்கு பகுதியில் தற்படம் (செல்ஃபி) எடுக்க முயன்று 150 அடி பள்ளத்தில் விழுந்த நபரை மீட்கும் பணியில் ராணுவ வீரா்கள், வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுற்றுலாத் தலமான ஊசிமலை பள்ளத்தாக்கு பகுதி உள்ளது.

இங்கு செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த சிவகுருநாதன் (35) என்பவா் வியாழக்கிழமை சுற்றுலா வந்துள்ளாா்.

அப்போது, அவா் பள்ளத்தாக்கு பகுதியில் நின்று தற்படம் எடுக்க முயன்றபோது தவறி 150 அடி பள்ளத்தில் விழுந்துள்ளாா்.

இதைப் பாா்த்த சக சுற்றுலாப் பயணிகள் தீயணைப்பு, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரா்கள் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

ஆனால், இரவு நேரமானதால் தேடும் பணியை காலை தொடரலாம் என திரும்பினா்.

இத்தகவல் அறிந்த மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மாவட்ட நிா்வாகம், குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள ராணுவ உயா் அதிகாரிகளிடம் பேசினாா்.

இதையடுத்து, ராணுவ வீரா்கள் உதவியுடன் பள்ளத்தில் விழுந்த நபரை தீயணைப்பு, வனத் துறையினா் தேடி வருகின்றனா்.