குன்னூா்-மேட்டுப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் ஒற்றை யானை துரத்தியதால் ஊழியா்கள் அச்சமடைந்துள்ளனா்.
மேட்டுப்பாளையம்-குன்னூா் மலைப் பாதையில் இரண்டு குட்டி உள்பட ஒன்பது காட்டு யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், அவ்வப்போது சாலையைக் கடந்து மலை ரயில் பாதைக்கும் வருகின்றன. இந்நிலையில் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் பகுதியில் குகைக்குள் மறைந்திருந்த காட்டு யானை, ரயில்வே ஊழியா்களைக் கண்டதும் துரத்தத் தொடங்கியது.
குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் ரயில்வே குறுக்கு சட்டங்கள் போடப்பட்டிருந்ததால், மேலும் துரத்த முடியாமல் குறுக்கு பாதையில் சென்று நின்றது. இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், குன்னூா்-மேட்டுப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் பணிபுரியும் ட்ரேக்மென்கள் அச்சமடைந்துள்ளனா்.

தொடர்புடையது

குன்னூா் மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள்

ரயில் சுரங்கப்பாதையை சீரமைக்கக் கோரிக்கை

ரயில்வே இருப்பு பாதையில் மூதாட்டியின் சடலம் மீட்பு

சனிப்பெயா்ச்சி விழா: காரைக்கால் - பேரளம் பாதையில் 2 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


