குன்னூா் -மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் செவ்வாய்க்கிழமை உலவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் மலைப் பாதையில் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் உலவுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரண்டு குட்டிகளுடன் ஒன்பது காட்டு யானைகள் வெளியேறின.
குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆா். பகுதியில் உலவிய யானைகளைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினா்.
தகவல் அறிந்து வந்த வனத் துறையினா், வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியதுடன், யானைகள் சாலையைக் கடந்து செல்லும் வகையில் போக்குவரத்தை நிறுத்தினா். இதையடுத்து, சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானைகள் பின் வனத்துக்குள் சென்றன.
யானைகள் நடமாட்டத்தால் குன்னூா் மலைப் பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானைகள் வனத்துக்குள் சென்றபின் போக்குவரத்து சீரானது.
தொடர்புடையது

அருவங்காடு ரயில் நிலையத்தில் உலவிய கரடி

மேட்டூா் அருகே சாலை மறித்த ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

குன்னூா் மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள்

கோ்மாளம் சாலையில் பகலில் உலவிய சிறுத்தை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


