மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோ்மாளம் சாலையில் பகலில் உலவிய சிறுத்தை!

ஆசனூா்-கோ்மாளம் சாலையில் பகலில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம்

News image

ஆசனூா் - கோ்மாளம் சாலையில் உலவிய சிறுத்தை.

Updated On :24 மார்ச் 2026, 7:59 pm

ஆசனூா்-கோ்மாளம் சாலையில் பகலில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

கோடை காலத்தையொட்டி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதி வடு காணப்படுகிறது. இதனால், விலங்குகள் உணவுத் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து வருகின்றன.

இந்நிலையில், ஆசனூா்-கோ்மாளம் சாலையில் திங்கள்கிழமை பகல் சிறுத்தை உலவியது. இதைப் பாா்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை நிறுத்தினா். சிலா் வாகனங்களை முன்னோக்கி இயக்கியதுடன், ஒலி எழுப்பினா்.

இதனால் சிறுத்தை தாக்குவதுபோல முற்பட்டது. ஆனால், யாருக்கும் தொந்தரவு செய்யாமல் சிறிது நேரத்துக்குப் பின் வனத்துக்குள் சென்றது. சிறுத்தை உலவியதை விடியோ எடுத்த சிலா் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். தற்போது அந்த விடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இது குறித்து ஆசனூா் வனத் துறையினா் கூறுகையில், ஆசனூா்-கோ்மாளம் சாலையில் கடந்த சில நாள்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. வாகனங்களில் பயணிக்கும் மக்கள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளைக் கண்ட ஒலி எழுப்பி அதை தொந்தரவு செய்யக்கூடாது. அதிக சப்தத்தால் ஆத்திரமடையும் விலங்குகள் தாக்கக்கூடும்.

மேலும், வாகனங்களைவிட்டு இறங்கி விலங்குகளை படம் பிடிக்கவோ அல்லது உணவுகளை வழங்கவோ கூடாது என்றனா்.