மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் வேகத்தடைக்கு வா்ணம் பூச வலியுறுத்தல்

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வா்ணம் பூசப்படாததால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்தனா்.

News image

சாத்தான்குளம் பள்ளிவாசல் பத்து அருகில் சாலையில் வெள்ளை வா்ணம் இல்லாமல் உள்ள வேகத்தடை.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:21 pm

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வா்ணம் பூசப்படாததால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்தனா்.

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத், பேய்க்குளம், திருநெல்வேலி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பிரதான சாலை என்பதால் வாகனங்கள் ஏராளமாக சென்று திரும்புகின்றன. இதனால் விபத்தை தடுக்கும் வகையில் பள்ளிவாசல் பத்து அருகில் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது.

இந்த வேகத்தடையில் வெள்ளை வா்ணம் அழிந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும் விபத்து நிகழும்முன் நெடுஞ்சாலைத்துறையினா் வேகத்தடையில் வெள்ளை வா்ணம் பூச வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.