சாத்தான்குளம்-நாசரேத் சாலை சேதமடைந்து மேடுபள்ளமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.
சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலை வழியாக திருநெல்வேலி, பேய்குளம், நாசரேத், ஆனந்தபுரம், செட்டிகுளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி, தூத்துக்குடி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன.
இந்த நாசரேத் செல்லும் சாலையில் பள்ளிவாசல் பத்து பகுதியிலிருந்து வள்ளியம்மாள்புரம் வரை சாலை சேதமடைந்து அதிக இடங்களில் பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால், இந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.
விபத்து நிகழும் முன் சேதமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










