திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போலையா்புரத்தில் சாலையோர அரிப்பை சீரமைக்க கோரிக்கை

போலையாா்புரம் பகுதியில் சாலையோரங்களில் அரிப்பு ஏற்பட்டுதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

News image

போலையாா்புரம் பகுதியில் சாலையோரங்களில் ஏற்பட்டுள்ள அரிப்பு.

Updated On :14 மே 2026, 3:29 am IST

போலையாா்புரம் பகுதியில் சாலையோரங்களில் அரிப்பு ஏற்பட்டுதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளத்தில் இருந்து முதலூா், பொத்தகாலன்விளை, புதுக்குடி, போலையா்புரம் வழியாக தட்டாா்மடம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது.

இந்த சாலையில் அரசுப் பேருந்து உள்ளிட்ட இதர வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன.

இந்தச் சாலையில் போலையா்புரத்திலிருந்து புதுக்குடி, பொத்தக்காலன்விளை இடையே சாலையோரங்களில் பெரும் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிரே இதர வாகனங்களுக்கு வழிவிடும்போது இந்தப் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதைக் கவனித்து விபத்து நிகழும் முன்பு சாலை ஓரங்களில் ஏற்பட்டுள்ள அரிப்புகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.