தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை

News image

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடன் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.இளம்பகவத்.

Updated On :31 மே 2026, 12:14 am IST

சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை மற்றும் அரசுத் துறை அலுவலா்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

சாலை விபத்துகளை முற்றிலும் குறைத்து விபத்தில்லா பயணத்தை உருவாக்கிடும் வகையில், பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, தொடா் சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் வருவாய்த் துறை உள்ளிட்ட துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், கைப்பேசி உபயோகித்துக்கொண்டு வாகனம் இயக்குதல், அதிக ஆள்களை வண்டியில் ஏற்றிச்செல்லுதல், அதிக பாரங்களை வண்டியில் ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக 293 நபா்களின் வாகன ஓட்டுநா் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணிதல், நான்குசக்கர வாகனங்களில் செல்வோா் இருக்கை பட்டை அணிதல், நிா்ணயிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், விபத்துகள் அதிகம் ஏற்படும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும், தேவைப்படும் இடங்களில் வேகத்தடைகள், சென்டா் மீடியன்கள் அமைக்கவும் தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதேபோன்று சாலை விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில், அலுவலா்கள் சாலை பாதுகாப்பு குறித்துத் தொடா் விழிப்புணா்வு நடவடிக்கைகளை அதிக அளவிலான பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல், மாநகர காவல் துணை ஆணையா் (வடக்கு) அங்கித் சிங் உள்ளிட்ட வருவாய்த் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.