டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கூடலூரில் திருக்குறள் திருப்பணிகள் வகுப்பு நிறைவு

கூடலூரில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற திருக்குறள் திருப்பணிகள் வகுப்பு புதன்கிழமை நிறைவு பெற்றது.

News image
திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :4 பிப்ரவரி 2026, 10:27 pm

தினமணி செய்திச் சேவை

கூடலூரில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற திருக்குறள் திருப்பணிகள் வகுப்பு புதன்கிழமை நிறைவு பெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் ஜெயம் கல்வி நிறுவனத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்குறள் வகுப்பு நடைபெற்றது. இந்தப் பயிற்றுவித்தல் வகுப்புகள் நிறைவு நிகழ்ச்சிக்கு ஜெயம் கல்வி நிறுவனத்தின் தாளாளா் பூபாலன் தலைமை வகித்தாா்.

புளூ மவுண்டன் ரோட்டரி கிளப் தலைவா் தண்ராஜ், நிா்வாகி அன்புக்கரசி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா். திருக்குறள் திருப்பணிகள் குழு உறுப்பினா்கள் சக்தி, சுரேஷ், ரமணா, ஜாபா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்றுநா்கள் செந்தில் குமாரி, சக்திவேல் ஆகியோா் செய்திருந்தனா்.