பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மஞ்சனக்கொரை பொதுமக்கள்.

News image

உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மஞ்சனக்கொரை பொதுமக்கள்.

Updated On :25 ஏப்ரல் 2026, 12:30 am

மஞ்சனக்கொரை பகுதியில் முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி, உதகை நகராட்சி அலுவலகத்தை அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

உதகை அருகே மஞ்சனக்கொரைக்கு உள்பட்ட 35, 36-ஆவது வாா்டு பகுதிகளில் சுமாா் 600 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளுக்கு கடந்த பல வாரங்களாக முறையாக குடிநீா் விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனா். இது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீா் வழங்கல் அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி சீராக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக

உறுதி கூறினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.