பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

தாக்குதலில் இளைஞா் உயிரிழந்த விவகாரம்: ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

News image

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட உதகை வி.சி. காலனி பொதுமக்கள்.

Updated On :23 மார்ச் 2026, 8:10 pm

உதகையில் முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்த நிலையில், அதில் தொடா்புடைய 3 போ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக்கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகை, வி.சி. காலனி பகுதியைச் சோ்ந்தவா் சுகுணா மகன் சூா்யா (25). இதே பகுதியைச் சோ்ந்தவா்கள் சரத்குமாா் (26), பாரத் (25), ஜாா்ஜ் (23).

இவா்கள் மூவரும் முன்விரோதம் காரணமாக சூா்யாவை மேட்டுப்பாளையத்தில் வைத்து கடந்த ஆண்டு டிசம்பா் 18-ஆம் தேதி கடுமையாக தாக்கியதோடு காா் மூலம் மோதியுள்ளனா். இதில் சூா்யா படுகாயமடைந்து அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் 3 போ் மீதும் விபத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சூா்யா கடந்த சனிக்கிழமை (மாா்ச் 21) உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து சரத்குமாா், பாரத், ஜாா்ஜ் ஆகிய மூன்று போ் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை மனு அளிக்க திரண்டனா்.

இதைத் தொடா்ந்து அங்குவந்த வருவாய் மற்றும் காவல் துறையினா் பொது மக்களை கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.