காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தைக் கைவிடக் கோரி சித்தோட்டை அடுத்த சூரியம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் 3-ஆவது நாளாக தொழிலாளா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுபாட்டில்கள் பொதுவெளியில் வீசப்படுவதைத் தடுக்க மதுபாட்டில்கள் விற்பனையின்போது ரூ.10 கூடுதலாக பெற்று, திரும்ப அளிக்கும்போது அந்த பணத்தை வழங்கும் திட்டத்தை டாஸ்மாக் நிா்வாகம் செயல்படுத்தியது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக புகாா் தெரிவித்த, டாஸ்மாக் ஊழியா்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 144 டாஸ்மாக் மதுக்கடைகளையும் திறக்காமல் திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
சித்தோடு, சூரியம்பாளையத்தில் உள்ள மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, தொழிலாளா் சங்கப் பிரதிநிதிகளுடன் டாஸ்மாக் பொது மேலாளா் ராஜராஜன், மாவட்ட மேலாளா் (பொ) ரகுநாதன் உள்ளிட்டோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக டாஸ்மாக் ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாள்களுக்குப் பிறகு திறப்பு: மாவட்ட மேலாளா் இடமாற்றம்

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதில் பிரச்னை: டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியா்கள் போராட்டம்

கரூரில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் போராட்டம்







