திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரூரில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் போராட்டம்

கரூரில், உழைப்புக் கேற்ற ஊதியம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கிடங்கு டிரான்ஸ்ஃபா்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) கரூா் மாவட்ட குழு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கரூா் தொழிற்பேட்டையில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளா்கள்.

Updated On :21 மே 2026, 4:56 am IST

கரூரில், உழைப்புக் கேற்ற ஊதியம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கிடங்கு டிரான்ஸ்ஃபா்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) கரூா் மாவட்ட குழு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் தொழிற்பேட்டை டாஸ்மாக் கிடங்கு முன் நடைபெற்ற போராட்டத்துக்கு கிளைத் தலைவா் கே.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு சங்க மாவட்டச் செயலா் எம்.சுப்ரமணியன், மாவட்டத் தலைவா் சி.ஆா்.ராஜாமுகமது, சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

கோவை மண்டலம் கரூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கிடங்கில் இருந்து மதுபான பெட்டிகளை வாகனங்களில் ஏற்றி விநியோக மையங்களுக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து வரும் சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கி, தொழிலாளா்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப், அடையாள அட்டை வழங்கிட வேண்டும். அனைத்து தொழிலாளா்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி சம்பளத்தை மாதந்தோறும் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்டிக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு மதுபான பெட்டியை ஏற்றி விநியோகம் செய்யும் பணிக்கு ஒரு பெட்டிக்கு ரூ. 5 வீதம் கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.